என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவியிடம் கேலி கிண்டல்"
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சேனாதிபதி(வயது 52). விவசாயி. இவரது மனைவி பவானி(47). இவர்களது மகள் பானுப்பிரியா(19). இவர் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த சத்யராஜ்(30). அவரது தம்பி சரண்ராஜ் ஆகியோர் பானுப்பிரியா கல்லூரிக்கு செல்லும்போது கேலி, கிண்டல் செய்து வந்தனர்.
இதுகுறித்து பானுப்பிரியா தனது பெற்றோரிடம் கூறினார். உடனே பவானியும், சேனாதிபதியும் சத்யராஜ் வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த அவரது தந்தை சாமிதுரையிடம் என் மகளை உனது மகன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள் என கூறினார்.
இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சாமிதுரை. அவரது மகன்கள் சத்யராஜ், சரண்ராஜ் ஆகியோர் இரும்பு பைப்பால் பவானி, சேனாதிபதியை தாக்கினர்.
மேலும் அவர்களை கொலை மிரட்டலும் விடுத்தனர். தாக்குதலில் காயமடைந்த சேனாதிபதி பவானி ஆகியோர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தசம்பவம் தொடர்பாக சோழத்தரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து சாமிதுரை. அவரது மகன்கள் சத்யராஜ், சரண்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்